இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

படம்
தீர்மானத்தின்படி, 17-04-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்வில், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்கள்: பிரவீன்   அலெக்ஸாண்டர் பிரஷாந்த்  இராமதாஸ் சிவபாலன்  இந்நிகழ்வினை சிறப்பூட்டும் விதமாக நன்கொடை வழங்கிய புரவலர்களுக்கும், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் மாறன் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். செய்தித்தாள்களில்,

பங்குனி உத்திரம் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் வழங்கப்பட்டது

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் பங்குனி உத்திரம் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் வழங்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

மகதி சிக்கன் உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் அவர் தந்தை தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி செட்டியார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது

படம்
இன்று (01-04-2025) மாறன் அறக்கட்டளையின் சார்பாக மகதி சிக்கன் உரிமையாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் அவர் தந்தை தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி செட்டியார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு வசந்தம் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்காக, சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள், பழ துண்டுகள் முதலியவற்றை மாறன் அறக்கட்டளை சார்பாக வழங்கினார்.