தீர்மானத்தின்படி, 17-04-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்கள்: பிரவீன் அலெக்ஸாண்டர் பிரஷாந்த் இராமதாஸ் சிவபாலன் இந்நிகழ்வினை சிறப்பூட்டும் விதமாக நன்கொடை வழங்கிய புரவலர்களுக்கும், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் மாறன் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். செய்தித்தாள்களில்,
03-05-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், வேப்பூர் ஊராட்சியின் காவல் ஆய்வாளர் திருமதி சசிகலா அம்மையார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். உடன், மாநில துணைத்தலைவர் சி.குமார் மற்றும் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை சிறப்பூட்டும் விதமாக புரவலர் திரு. பழனி (LIC) அவர்களின் தாயார் நினைவுநாளுக்கு வழங்கப்பட்ட நிதி 2,000 ருபாய் மற்றும் புரவலர் திருமதி பவானி விஜயகுமார் அவர்களால் வழங்கப்பட்ட நிதி 10,000 ருபாய் தொகைகள் பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்ட உதவிக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
31-01-2025 அன்று மாறன் அறக்கட்டளை திருவெண்ணெய்நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தலைவராக திரு த.சிவக்குமார் அவர்களும் செயலாளராக திரு மூ.விஜயகுமார் அவர்களும் பொருளாளராக திரு பீ.வினோத்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது.