மாறன் அறக்கட்டளை சார்பாக (01-07-2025) அன்று கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை ருபாய் 3000 மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் மூவாயிரம் அச்சடித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தீர்மானத்தின்படி, 17-04-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்கள்: பிரவீன் அலெக்ஸாண்டர் பிரஷாந்த் இராமதாஸ் சிவபாலன் இந்நிகழ்வினை சிறப்பூட்டும் விதமாக நன்கொடை வழங்கிய புரவலர்களுக்கும், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் மாறன் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். செய்தித்தாள்களில்,
மாறன் அறக்கட்டளை சார்பாக இன்று (27-06-2025) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சியை சேர்ந்த தந்தையின் ஆதரவு இல்லாமல் தனது தாயின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்வி பயிலும் மாணவி ஜீவிதா (வயது 18) 12 ஆம் வகுப்பிற்கு மேல் தனது கல்வியை தொடரமுடியாத நிலையில் நமது மாறன் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட கள செயல்பாட்டு தலைவர் புரவலர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் முயற்சியில் அந்த மாணவி கல்லூரியில் (B.COM) சேர்க்கப்பட்டார் . மேலும் கல்லூரி அவரது வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் அம்மாணவி நடந்து சென்று வரும் நிலை உள்ளது. அந்த மாணவியின் நிலை அறிந்து அவருக்கு கல்லூரி சென்று வர மாறன் அறக்கட்டளை சார்பாக மிதிவண்டி வழங்கப்பட்டது மற்றும் அந்த மாணவியின் கல்விச்செலவினை முழுவதுமாக மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.