கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சீரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாய் தந்தையை இழந்து தனது பாட்டியின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்விப்பயிலும் கீழ்காணும் இரு பெண் குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது

மாறன் அறக்கட்டளை சார்பாக (29-06-2025) இன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சீரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாய் தந்தையை இழந்து தனது பாட்டியின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்விப்பயிலும் கீழ்காணும் இரு பெண் குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அக்கிராமத்திற்கு ஆய்விற்கு சென்று அந்த குழந்தைகளின் நிலை அறிந்து அவர்களின் கல்வி செலவினை முழுவதுமாக மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.

மேலும், அக்குழந்தைகள் வசிக்கும் இருப்பிடம் மோசமானதாகவும் விஷ பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் இருப்பதால் வேறு பல அமைப்புகளும் அவர்களுக்கு வீடு கட்டும் பணிக்கு உதவுவதாக அறிவித்துள்ளன. அதன்படி வீட்டிற்கான வாசல் கால் மற்றும் கதவு செய்யும் பணிக்கான செலவினை மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.

உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

'ழ' ஆதித்தமிழர் தற்காப்புக் கலைக்கோயில் மையத்திற்கு சிலம்பக்கலை பயிற்சி மைதானம் அமைத்துத் தரப்பட்டது