சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது



மாறன் அறக்கட்டளை சார்பாக 13-03-2025 அன்று கடலூர் மாவட்டம் கீழக்கொல்லை கிராமத்தில் இயங்கி வரும் சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு நேரில் சென்று கோடை வெயில் தாக்கத்தை குறைக்கும் பழக்கலவைகளை அக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் அப்பள்ளி குழந்தைகளுக்கு புரதச்சத்து குறைபாடு இருப்பதாகவும் அதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை மாறன் அறக்கட்டளை குழந்தைகளுக்கு வழங்குமாறு அப்பள்ளி நிர்வாகி திரு.குமார் அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அவரது கோரிக்கை மனு விரைவில் பரிசீலனை செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் அச்சிட்டும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சியை சேர்ந்த தந்தையின் ஆதரவு இல்லாமல் தனது தாயின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்வி பயிலும் மாணவி ஜீவிதா(18) 12 ஆம் வகுப்பிற்கு மேல் தனது கல்வியை தொடரமுடியாத நிலையில் நமது மாறன் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட கள செயல்பாட்டு தலைவர் புரவலர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் வாயிலாக அந்த மாணவியின் கல்விச் செலவினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது