செம்மேடு அரசு உயர்நிலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது

 


மாறன் அறக்கட்டளை சார்பாக 13-03-2025 அன்று கடலூர் மாவட்டம், செம்மேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு கல்வியில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டுமென தலைவர் (திரு .சிவகுமார்)  செயலாளர் (திரு.விஜயகுமார் ) மற்றும் பொருளாளர் (திரு .வினோத்குமார் ) முன்னிலையில் தீர்மானம் இயற்றப்பட்டு அதன்படி 14-03-2025 அன்று  செம்மேடு அரசு உயர்நிலை பள்ளியில் நடக்கவிருக்கும் ஆண்டு விழாவில் தகுதியான மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் அச்சிட்டும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சியை சேர்ந்த தந்தையின் ஆதரவு இல்லாமல் தனது தாயின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்வி பயிலும் மாணவி ஜீவிதா(18) 12 ஆம் வகுப்பிற்கு மேல் தனது கல்வியை தொடரமுடியாத நிலையில் நமது மாறன் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட கள செயல்பாட்டு தலைவர் புரவலர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் வாயிலாக அந்த மாணவியின் கல்விச் செலவினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது