செம்மேடு அரசு உயர்நிலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது

 


மாறன் அறக்கட்டளை சார்பாக 13-03-2025 அன்று கடலூர் மாவட்டம், செம்மேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு கல்வியில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டுமென தலைவர் (திரு .சிவகுமார்)  செயலாளர் (திரு.விஜயகுமார் ) மற்றும் பொருளாளர் (திரு .வினோத்குமார் ) முன்னிலையில் தீர்மானம் இயற்றப்பட்டு அதன்படி 14-03-2025 அன்று  செம்மேடு அரசு உயர்நிலை பள்ளியில் நடக்கவிருக்கும் ஆண்டு விழாவில் தகுதியான மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் அச்சிட்டும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது

சுதந்திர தின விழாவன்று அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது